துறையூர், அக்.8: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த நல்லவண்ணிபட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தருண்குமார் (17). இவர் நேற்று காலையில் கரட்டாம்பட்டியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது, கரட்டாம்பட்டி பேருந்து நிறுத்தத்தை கடக்கும் பொழுது பின்னால், திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புலிவலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement