Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி, ஆக.19: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.

அவற்றை பெற்றுக்கொண்ட மேயர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, ஜெய நிர்மலா, நகர்நல அலுவலர், செயற்பொறியார்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.