சமயபுரம், டிச. 5: சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றத தலமாக திகழ்ந்து வரும் சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், மற்றும் பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்தே சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சமயபுரம் மாரியம்மன் கோயிலை நோக்கி குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தினந்தோறும் கோயிலில் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கிறது.
+
Advertisement

