Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய விளையாட்டு தினவிழா மனித சங்கிலி

திருச்சி, செப்.2: திருச்சியில் நடந்த தேசிய விளையாட்டு தினவிழா மனித சங்கிலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் பிறந்தநாளையொட்டி கடந்த 29ம் தேதி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (பிஇஎப்ஐ), ரோட்டரி அமைப்புகளான திருச்சி பட்டர்பிளை, திருச்சி டிசி பிரைடு ஆகியவை இணைந்து மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை திருச்சி காவிரி மேம்பாலத்தில் நடைபெற்றது.

தேசியக் கல்லூரியைச் சார்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த மனித சங்கிலியை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலியில் பதாகைகளை ஏந்தி தேசியக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிறந்த பதாகைகளுக்கு அமைச்சர் முன்னிலையில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.இம்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேசியக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்ற இம்மாபெரும் விளையாட்டு நாள் விழா விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்வினை தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைத்தார்.