Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடபாதிமங்கலத்தில் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

மன்னார்குடி, நவ. 11: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோலாட்சி குலமாணிக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் கெளசிக்(21). திருமணமாகாதவர். மினிவேன் டிரைவராக வேலை செய்து வந்த கெளசிக்கு மது அருந்தும் பழக் கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால், அவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மனவேதனையில் இருந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி இரவு கெளசிக் வீட்டிற்கு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் வேதனை அடைந்த அவரது தந்தை மகனை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கெளசிக் வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலை பாலம் அருகே விஷமருந்தி மயங்கி கிடந்தார். அப்போது அவ்வழியே சென்ற சிலர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கெளசிக் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக இறந்த கெளசிக்கின் தந்தை கல்யாண சுந்தரம் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.