Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வாலிபர், பெற்றோர்கள் மீது வழக்கு திருமணம் செய்த 17 வயது சிறுமி கர்ப்பம்

வந்தவாசி, நவ.18: வந்தவாசி அருகே திருமணம் செய்த 17 வயது சிறுமி கர்ப்பமான நிலையில் வாலிபர், பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த்(22) என்பவர் காதலித்து கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி கர்ப்பமானதால் நேற்று முன்தினம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி கர்ப்பமாக உள்ளது குறித்து வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறுமி திருமணம் செய்ததாக பிரசாந்த், அவரது தந்தை சுதாகர், தாய் லட்சுமி, சிறுமியின் தந்தை தாய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.