Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு உதவி செய்வது போல் நடித்து

ஆரணி, செப்.16: ஆரணி அரசு மருத்துமனையில் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள்(76). இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அங்கு டாக்டர்கள், கன்னியம்மாளை பரிசோதனை செய்து ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பினர். அப்போது, மாஸ்க் அணிந்த மர்ம நபர் ஒருவர் கன்னியம்மாளிடம் சென்று ஸ்கேன் எடுக்கும்போது கம்பல், மூக்குத்தி அணிந்திருக்கக் கூடாது, அதனை என்னிடம் கழட்டி கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனால், கன்னியம்மாள் ரூ.500, கம்பல், மூக்குத்தி என ஒரு சரவன் நகையை கழட்டி அந்த நபரிடம் கொடுத்து தனது பையில் வைத்திருக்குமாறு கூறிவிட்டு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது அந்த நபர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி பார்த்தும் அந்த நபர் கிடைக்கவில்லை. அவர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மூதாட்டி கன்னியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.