திருவண்ணாமலை, செப்.3: திருவண்ணாமலை தாமரை குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள தாமரைக் குளத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement