காங்கயம்,அக்.10:காங்கயம் அருகே மறவபாளையம், மாரம்பள்ளதோட்டத்தை சேர்ந்தவர் சின்னசாமி (60). விவசாயியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சின்னசாமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement