Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருப்பூர், அக்.17:திருப்பூர் காந்திநகரை சேர்ந்தவர் அபினாஷ் (20), எலக்ட்ரீசியன். இவர், நேற்று திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம், ஜெயம் கார்டன் பகுதியில் பாலாஜி என்பவரின் வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அபினாஷ் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் கட்டிட உரிமையாளர் பாலாஜி, ஒப்பந்ததாரர் பாலாஜி ஆகியோர் மீது உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்ற வைத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.