Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டூவீலரில் நிலைதடுமாறி விழுந்த முதியவர் பலி

திருப்பூர், செப்.12: திருப்பூர், மங்கலம் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மணி (63). கூலி தொழிலாளி. இவர் கடந்த 8ம் தேதி மதுபோதையில் பைக்கை ஓட்டி வந்தார். மேற்கு வஞ்சிபாளையம் ரோட்டில் சென்றபோது கொண்டிருந்த போது நிலை தடுமாறி மணி கீழே விழுந்தார். இதில் மணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.