Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை

திருப்பூர், செப்.11: திருப்பூர் நல்லூர் அடுத்த யாசின் பாபு நகரை சேர்ந்தவர் அனுசுயா (20). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். அனுசுயாவின் காதல் விவகாரம் தொடர்பாக அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுசுயா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தொடர்ந்து, அவரை மீட்கப்பட்டு நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அனுசுயா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.