Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிஏபி வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பூர், மார்ச் 18: திருப்பூர் மாவட்டம், பொங்கலூர், பிஏபி வாய்க்காலில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் வருவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும், கொலையா ? அல்லது தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.