காங்கயம், மார்ச் 18: காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் 146 கிலோ தேங்காய் பருப்புகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனை காங்கயம் சுற்று வட்டார பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இதில் குறைந்தபட்ச விலையாக ரூ.150.50க்கும், அதிகபட்ச விலையாக ரூ.151.50க்கும் பருப்புகள் ஏலம் எடுக்கப்பட்டது. 146 கிலோ தேங்காய் பருப்புகள் மொத்தமாக ரூ.22,060க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
+
Advertisement