Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலீஸ் நிலையத்துக்கு வர கட்டாயம் இல்லை பாலியல் புகாரை பெற வீட்டிற்கே வரும் போலீஸ்

பல்லடம், ஆக.18: பாலியல் தொடர்பாக புகாரை பெற்றுக்கொள்ள வீட்டிற்கே போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.பல்லடம் அருகே தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு போலீசார் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினர். இதில் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி பேசுகையில்: பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்க போலீஸ் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. புகாரைப் பெற்றுக்கொள்ள போலீசாரே வீட்டுக்கு வருவார்கள்.

போக்சோ சட்டத்தில் விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் தான் தற்போது நிறைய வழக்குகள் பதிவாகிறது. இதனால் பாலியல் குற்றங்கள் வெளியே தெரிந்தால் அவமானம், நீதிமன்ற அலைச்சல்கள் போன்றவை குறித்த தவறான எண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் ஏட்டு தீபா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.