Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

களக்காட்டில் இளம்பெண் மாயம்

களக்காடு, நவ. 26: களக்காட்டில் பட்டதாரி இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (55). இவரது மகள் சுபாஷினி (22). இவர், நெல்லையில் உள்ள கல்லூரியில் எம்எஸ்சி படித்து விட்டு கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி மாலை இவர் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று வேலைக்கு பதிவு செய்து விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுபாஷினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து லெட்சுமணன் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மாயமான சுபாஷினியை தேடி வருகின்றனர்.