Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

3 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு ஏழரை ஆண்டுகள் சிறை

நெல்லை, நவ. 22: நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் (55). இவர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட குழந்தை தனக்கு நேர்ந்த அவலத்தை அறியாமல் அழுது கொண்டே சொல்வதைக்கேட்டு அந்த குழந்தையின் தாயார் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, குழந்தையின் பெற்றோர் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து சோமசுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் சோமசுந்தரம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் விவசாயி சோமசுந்தரத்திற்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.