Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது குடிக்க பணம் தராத தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் சிறை

தென்காசி, செப். 17:ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த ஜான் தனபால் மகன் பிரைஸன் (29). கூலி தொழிலாளியான இவர், கடந்த 17.6.2021 அன்று தனது தந்தையான ஜான் தனபாலிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தையை கம்பால் அடித்து கீழே தள்ளினார். இதில் தனபால் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பிரைஸனை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, பிரைஸனுக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜரானார்.