Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஷம் குடித்து சலவை தொழிலாளி தற்கொலை

கேடிசி நகர், அக். 10: குடிப்பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித் ததால் மனமுடைந்த சலவைத்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுடலைமாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(45). சலவை தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இசக்கிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கில் தொங்கினார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.