நெல்லை, நவ. 6: சங்கரன்கோவிலில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஹமீதா (72). இவர் சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஹமீதா இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
