Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

8.5 கிலோ கஞ்சாவுடன் டிரைவர் கைது 4 பேருக்கு குண்டாஸ்

அம்பை,ஆக.5: கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பை முடபாலத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கர் மகன் சுனில்ராஜ் (19), மகேஷ் மகன் முத்து (21), மேகலிங்கம் மகன் கணேசமூர்த்தி (22) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்தியது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இந்த 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4பேரையும் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.