Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாபர் மசூதி இடிப்பு தினம் பத்தமடையில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வீரவநல்லூர், டிச.8: பத்தமடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பத்தமடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுலைமான், அமைப்பு பொதுச் செயலாளர் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா வரவேற்றார். தொகுதி செயற்குழு உறுப்பினர் அசன் காதர் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மவுலவி அப்துல் காதர் அல்தாபி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரபி கல்லுரி முதல்வர் சவுகத்அலி உஸ்மானி, மாவட்ட செயலாளர்கள் ஜலில், தவுபிக், லைத்துல் ஆதிஹா, பொருளாளர் இளையாராஜா, நர்கிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது ஷபி, ஜன்னத், அகமதாள், பானு, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் ஆலிமா, எஸ்.டி.டி.யு மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணை தலைவர் பீர்பாத்து, வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன், தொகுதி தலைவர்கள் கலில், காஜா பிர்தவுஸி, சலிம், தொகுதி செயலாளர்கள் இப்ராகிம், ரிஸ்வான், இம்ரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பை சட்டப்பேரவை தொகுதி துணை தலைவர் ஷெரிப் நன்றி கூறினார்.