Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாலிபர் தற்கொலை

ஸ்பிக்நகர், அக். 31: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் மாரிமுத்து (24). சப்கோல்டிங் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு மாதமாக உறவுக்கார பெண்ணை காதலித்து வந்தபோதும் அதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தனராம். இதனால் விரக்திக்கு ஆளான மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாராம். பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கச் சென்றார். நேற்று வெகுநேரமாகியும் மாடியில் தூங்கச் சென்ற மாரிமுத்து வராததால் பதறிய குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து விரைந்துவந்த முத்தையாபுரம் போலீசார், மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.