விளாத்திகுளம்,அக்.30: விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் சாலை வழியாக விருச்சம்பட்டி, வேடப்பட்டி, ஓ.லட்சுமிநாராயணபுரம், நெடுங்குளம், ஈ.வேலாயுதபுரம், பல்லாகுளம், தத்தனேரி, குறளயம்பட்டி, இலந்தைகுளம், லெக்கம்பட்டி, மாமுநைனார்புரம், வேம்பார், காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விளாத்திகுளத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே போதிய வேகத்தடைகள் மற்றும் மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் அதிமுக சார்பில் விபத்து ஏற்படும் பகுதியில் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், மேலும் விபத்து பகுதி என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் விளாத்திகுளம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சண்முகசாமி, நகர துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
+
Advertisement
