நாசரேத் செப்.16: நாசரேத் அருகே டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாசரேத் அருகே உள்ள முதலைமொழி நடுத்தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் பர்னபாஸ் (55). இவர் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். நேற்று பர்னபாஸ் டிராக்டரை ஓட்டிக்கொண்டு மேலவெள்ளமடம்- வைத்திலிங்கபுரம் சாலையில் முத்துநகர் அருகே சென்று கொண்டிருந்தார். திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் டிராக்டர் ஓட்டிய பர்னபாஸ் கீழே விழுந்துள்ளார். அவர் மீதும் டிராக்டர் ஏறியதால் பர்னபாஸ் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். இது குறித்து நாசரேத் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பர்னபாஸ் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நாசரேத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement