Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன்னார்குடி வடிவாய்க்கால் சேரியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

மன்னார்குடி, அக். 30: மன்னார்குடி அருகே வடிவாய்கால் சேரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக் கோவிலில், 10 தினங்கள் கந்தசஷ்டி விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால் சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 10 தினங்கள் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. சூரசம் ஹாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங் காரம் செய்து பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை மணமேடையில் எழுந்தருளினர். சுவாமிக்கு பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்து வைத்தனர். அதனை தொடர் ந்து சிவாச்சாரியார்கள் ஹோம குண்டம் அமைத்து அதில் பூஜைகள் நடத்தினர். பின்னர், கங்கணம் கட்டுதல், சங்கல்பம், திருமாங்கல்யம் அணிவித்தல் ஆகியவை நடத்தப்பட்டு மாலை மாற்றுதல் வைபவம் நடத்தினர். இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.