Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம், ஆக.1: நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் ரயிலில் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் செயல் பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை, சம்பா ,தாளடி மற்றும் கோடை சாகுபடி செய்த நெல் அறுவடை விற்பனை செய்த நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வேகங்களில் அரவைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

சில நேரங்களில் தாலுக்கா பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கோள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி,நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை, திறந்தவெளி சேமிப்பு மையம் ஆதனூர் உள்ளிட்ட இடங்களிலும் சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் தாலுக்கா பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையச்களிலிருந்து 2,000 டன் பொது ரக நெல் மூட்டைகள் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் 42 ரயில் பெட்டி வேகன்களில் ஏற்றி அரவைக்கு திருப்பூர் அனுப்பி வைத்தனர்.