Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறந்த நகராட்சியாக திருவாரூர் தேர்வு

திருவாரூர், ஆக. 26: தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக திருவாரூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நகர்நல சங்கங்கள் சார்பில் நகராட்சி தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சியானது கடந்த 1914ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். அதன்பின்னர் 1978ம் ஆண்டில் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் அதிகளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில் தலைவராக புவனப்பிரியாசெந்திலும், துணை தலைவராக அகிலாசந்திரசேகரும் மற்றும் கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்தாண்டு மே மாதம் முதல் இந்த நகராட்சியானது தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையிலும் இந்த நகராட்சியில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதையடுத்து தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக 2023, 24ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து இதற்கான பாராட்டுசான்றிதழை சென்னையில் கடந்த 15ந் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து தலைவர் புவனப்பிரியாசெந்தில், கமிஷ்னர் பிரபாகரன் ஆகியோர் பெற்றுகொண்டனர்.

இந்நிலையில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து தலைவர் புவனப்பிரியாசெந்தில் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு விழாவானது நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு கவுன்சிலர் கலியபெருமாள், 2வது மலர்விழி, மற்றும் 7வது வார்டு வரதராஜன் ஆகியோர் சார்பிலும் இந்த வார்டுகளை சேர்ந்த நகர்நல சங்கங்கள் சார்பிலும் பாராட்டு விழாவானது நேற்று தென்றல் நகர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் மேற்படி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் சதீஷ்பாபு, சுகாதார ஆய்வாளர் தங்கராம் மற்றும் நகர்நல சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்களான டாக்டர் செந்தில், ஆசைதம்பி, வீரசேனன், ஆறுமுகம், குழந்தைவேலு, பூபாலன், சிவராமன், கணேசமூர்த்தி, அசோக்குமார், காத்தையன், தங்கவேலு, பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.