Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காந்திஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை

திருவாரூர், செப். 30: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுதினம் (2ந் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்த்திற்கும் விடுமுறைதினமாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் அன்றையதினம் மேற்படி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல் 3 பெற்ற மதுக்கூடங்களையும் மூடவேண்டும் எனவும், மேற்படி தினத்தில் மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது எனவும், இதனை மீறி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன் எப்.எல்2, எப்.எல் 3 உரிமம் பெற்ற மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுகூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்தல் மற்றும் உரிமங்களை ரத்துசெய்தல் மற்றும் உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.