வலங்கைமான், செப் 24: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றுநடைபெறும் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போராட்டக் குழுவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மக்கள்நல பணியாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும் என 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்