Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷா ஏரியில் மூழ்கி அரசு அதிகாரி பலி

ஆவடி, செப். 14: திருவள்ளூர் பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (37), சென்னை சாஸ்திரி பவனில் இளநிலை குடியுரிமை இளநிலை அதிகாரியாக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாத இவர், குடிப் பழக்கத்தால் ஏற்பட்ட வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 5ம் தேதி முதல் பணிக்குச் செல்லாமல் மதுபோதையில் ஊர் சுற்றி திரிந்துள்ளார். கடந்த 9ம் தேதி வெளியே சென்றவர் அதன் பின் வீட்டிற்கு வரவில்லை. அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வராமல் இருந்ததால் பெற்றோர் அவரை தேடிப் பார்த்துவிட்டு விட்டனர். இந்நிலையில், நேற்று திருநின்றவூர் ஈஷா ஏரியில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் தேவேந்திரன் என்பதை உறுதி செய்தனர். குடிபோதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.