Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பூந்தமல்லி, நவ.1: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் 20 மண்டலங்களில் 25 ஜோடிகள் வீதம் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். இதற்கான செலவுகளை கோயில் நிர்வாகமே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று காலை கோயில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் திருமணங்கள் நடந்தன. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மூர்த்தி, அறங்காவலர்கள் சந்திரசேகரர், கோவிந்தசாமி, வளர்மதி, சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், முன்னாள் அறங்காவலர் ரமேஷ், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் திருமண வீட்டார், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமாங்கல்யம், ஆடைகள், மாலை, பீரோ, கட்டில் போன்ற சீர்வரிசை பொருட்கள், விருந்து உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.