போடி, செப்.18: போடி மறவர் சாவடியில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதுறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. இம்முகாமிற்கு நகர் மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் ஜலால், பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 11, 13 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களிட மிருந்து 374 மனுக்கள் பெறப்பட்டது. இதில் போடி தாசில்தார் சந்திரசேகர் உடனடி தீர்வு ஏற்படுத்தும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறுவதற்கு 192 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், புதிய வீடுகள் கட்டுவதற் கா ன அனுமதி உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அந்த பயனளிகளுக்கு நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சான்றிதழ் வழங்கினர். போடி நகர செயலாளர் புருஷோத்தமன், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், திமுகவினர் பொதுமக்கள் பலரும் முகாமில் பங்கேற்றனர்.