Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணமான 4வது நாளில் புதுப்பெண் `ஓட்டம்’ போலீசில் கணவன் புகார்

சின்னமனூர், செப். 12: சின்னமனூர் அருகே திருமணமான 4வது நாளில் கணவர் வீட்டில் இருந்து புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னமனூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(29). இவருக்கும், 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவர் வீட்டில் புதுப்பெண் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் புதுப்பெண் வீட்டில் இருந்து வெளியில் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதனால் புதுமாப்பிள்ளை கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும், தனது மனைவி மாயமானது குறித்து ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து எஸ்ஐ ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 4வது நாளில் கணவர் வீட்டில் இருந்து புதுப்பெண் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.