Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

தேனி, ஜூலை 17: தேனியில் அனுமதியின்றி மது விற்றவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் எஸ்என்ஆர் ஜங்சன் பகுதியில் இருந்து காந்தி நகர் செல்லும் சாலையில் அல்லிநகரம் காவல்நிலைய எஸ்ஐ கண்ணன் தலைமையில் நேற்று முன் தினம் காலை போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறை அருகே சென்றபோது, கம்பம், வடக்குப்பட்டியை சேர்ந்த மனோகரன் (60) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். இதில் விற்பனை செய்வதற்காக 50 மதுபாட்டில்களை பையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.