Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

போடி, ஜூலை 26: போடி குலாளர்பாளையம் கரட்டுப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(45). இவரது மகன் அபினேஷ்(18). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தெருவில் நடந்து சென்ற அபினேஷை, அஜித்குமார் தனது நண்பருடன் சேர்ந்து வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபினேஷிற்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.