Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலியல் தொழில் நடத்தி வந்த இருவர் கைது

தஞ்சாவூர், அக்.31: தஞ்சை முனிசிபல் காலனி 5ம் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஆதிசத்யா (31), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வடிவேல் (36) ஆகிய இருவரும் சேர்ந்து 2 பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஆதிசத்யா, வடிவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 பெண்களை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.