Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தஞ்சாவூரில் இன்றும், நாளையும் மின்நிறுத்தம்

தஞ்சாவூர், பிப்.7: தஞ்சாவூர் அருகே பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 8ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், ராராமுத்திரக்கோட்டை, புலவர்நத்தம் வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை சின்னபுலி குடிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசப்பட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார் கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை 8ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று (7ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி, நெல்லித்தோப்பு, கடகடப்பை, தளவாய்பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவஸ்தாச்சாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.