Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகள் வேதனை பேராவூரணி அருகே குளமே இல்லாத கிராமத்தில் புதிதாக குளம் அமைப்பு

பேராவூரணி, அக்.25: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் ஊராட்சிக்குட்பட்ட சீவங்குறிச்சி கிராமத்தில் புதிதாக குளம் அமைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சீவங்குறிச்சி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய பகுதியான இக்கிராமத்தில் மக்களின் பொது பயன்பாட்டிற்கு குளம் இல்லாத காரணத்தால் புதிதாக குளம் உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் நீன்ட நாட்களாக முயற்சி செய்து வந்தனர். இதையடுத்து அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து, நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் குளம் அமைக்க அனுமதி பெற்றனர்.