Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்

மதுரை ஆஸ்டின்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அவரது நேர்முக உதவியாளர் கந்தசாமி மற்றும் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு, கள்ளர், நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 மாணவர்களில் 59 மாணவர்களுக்கு அரசு மாதிரி பள்ளியில் சேர்க்கை நடைபெற்றது.

இம்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்து பள்ளியில் சேர்ந்தனர். 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற சிறப்பு மிக்க மாணவர்களுக்கு கலெக்டர் சங்கீதா பதக்கம், நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும், நூறு சதவீதம் தேர்ச்சி, உயர் கல்விக்கு வழிகாட்டியோர் என தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.