Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை சிவகங்கை கோர்ட் தீர்ப்பு

சிவகங்கை, செப். 27: சிங்கம்புணரி செட்டியார் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (32). பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு 16வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி இறந்து விட்டதால் அவரது பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.