திருவாடானை, டிச. 4: மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை திருவாடானை வழியாக செல்கிறது. இந்த முக்கியமான நெடுஞ்சாலையில், அரசூர் கிராமத்தில் இருந்து தொண்டி நகரம் வரை, சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் மற்றும் ஆவாரை செடிகள் அடர்ந்து வளர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இந்த கருவேல மரங்கள் சில இடங்களில் சாலையை ஒட்டி வளர்ந்து, எதிரே வாகனம் வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள முள்செடிகளையும், ஆவாரை செடிகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

