Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை

சேலம், செப்.15: மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன் வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்ைட மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை (16ம் தேதி) நடக்கிறது. இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 6 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அடையாள அட்டையையும், வங்கி கடன் இணைப்பையும் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 1 லட்சம் மகளிர் சுயஉதவி குழுவினர் வங்கி கடன் இணைப்பை பெறுகின்றனர்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமானநிலையம் வருகிறார். அங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, எம்பிக்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்கின்றனர். விமானநிலைய முன்பகுதியில், சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் திரண்டிருந்து துணை முதல்வரை வரவேற்க இருக்கின்றனர்.

சேலம் மாநகரில் மேலும் சில நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

அந்த நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களிலும் அவருக்கு வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். துணை முதல்வர் வருகையையொட்டி, சேலம் மாநகர பகுதியில் கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையிலான போலீசாரும், மாவட்ட பகுதியில் எஸ்பி கௌதம்கோயல் தலைமையிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில்

ஈடுபடுகின்றனர்.