Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோஷ்டி மோதலில் 6 பேர் காயம்

கெங்கவல்லி, அக்.25: தலைவாசல் அருகே தனியார் பஸ்ஸில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இருதரப்பிலும் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைவாசல் அருகே ஊனத்தூரில் இருந்து சிறுவாச்சூர்-தலைவாசல் வழியாக ஆத்தூர் செல்லும் தனியார் பஸ்ஸில், ரவிக்குமார் என்பவர் நேற்று முன்தினம் சிறுவாச்சூர் வந்துகொண்டிருந்தார். அப்போது, சக்திவேல் தரப்புக்கும், ஐயப்பன் தரப்புக்கும் பஸ்ஸில் படியில் ஏறுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்ட நிலையில், இருவரது குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சிறுவாச்சூர் சக்திவேல்(46), அவரது மனைவி கண்ணகி(36) மற்றும் எதிர் தரப்பில் ஐயப்பன்(30) மற்றும் 10 வயது சிறுமி, 9 வயது சிறுவன் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைவாசல் இன்ஸ்பெக்டர் கந்தவேல் விசாரணை நடத்தி சக்திவேல் அளித்த புகாரின் பேரிலும், ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரிலும் இருதரப்பில் 20 பேர் மீது நான்கு பிரிவின் கீழ், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.