மேட்டூர், அக்.14: கொளத்தூர் அருகே கோட்டையூர் காவிரி ஆற்றில், ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக வருவாய்த்துறையினர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து சடலமாக கிடந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement