ஓமலூர், நவ.12: ஓமலூர் அருகே செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஓமலூர் அருகே செல்லப்பிள்ளைகுட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. பிடிஓ உமாசங்கர் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து மக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முகாமிலேயே நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். முகாமில் 14 துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில், குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், மகளிர் உரிமை தொகை கேட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தனர். முகாமில் ஓமலூர் தாசில்தார் ரவிக்குமார், ஓமலூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்.மகாராஜன், முன்னாள் சேர்மன் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
