Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 423 மனுக்கள் குவிந்தன

கெங்கவல்லி, அக்:10: ஆத்தூர் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 423 மனுக்கள் குவிந்தன. ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15, 16, 17வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. முகாமிற்கு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் தலைமை வகித்தனர். ஆத்தூர் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா, ஆத்தூர் தாசில்தார் பாலாஜி முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பட்டா மாறுதல், தனிப்பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இருப்பிடம், ஜாதி, வருமான சான்றிதழ்கள், புதிய ரேஷன் அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 423 மனுக்கள் வழங்கினர். அதிகபட்சமாக கலைஞர் உரிமைத்தொகை கோரி 184 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்ரமணியம், 16வது வார்டு பிரபா குமார், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், துப்புரவு அலுவலர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.