கெங்கவல்லி, ஆக.8: வீரகனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்எஸ்ஐ, முறையாக புகாரை விசாரிக்காததால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். வீரகனூர் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி. இவர் புகார்தாரர்களிடம் முறையாக விசாரிக்காமல், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. புகார் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரிக்காமல், ஒரு தரப்பினரிடம் மட்டும் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி கௌதம் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன் மீது எஸ்பி விசாரித்தார். இதில், புகார்தாரர்களிடம் எஸ்எஸ்ஐ சுப்பிரமணி ஒருதலை பட்சமாக நடந்து கொள்வது உறுதியானது. இதையடுத்து, அவரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, எஸ்பி கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement