நாகர்கோவில், நவ.27: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2 அன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரண்டு பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
+
Advertisement