Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரவுடி உள்பட 3 பேர் கைது

சேலம், ஜூலை 31: சேலம் கிச்சிப்பாளையம் ஒட்டகமார்க் கம்பெனி அருகில் நேற்று இரவு சிலர் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை அதேபகுதியை சேர்ந்த பிரசாந்த்(20) என்பவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று செல்போனை கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை எடுத்து அவரை வெட்டியுள்ளனர். இதனை தடுத்ததால் அவரது கையில் வெட்டு விழுந்தது. காயத்துடன் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி கார்த்தி(எ) பிச்சா கார்த்தி(27), அவரது தம்பி சாரதி(23), பூபதி(எ)டெல்லி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.